Breaking News
Home / தமிழ் / சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் திட்டம், பெண் குழந்தைகளின் வளமான எதிர் காலத்திற்காகவும், அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு உதவுவதற்காகவும், பிரமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்க்கும் வழங்கும் நிதி தர்சார்பின்மை மற்றும் பாதுகாப்பின் காரணமாக மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் பெண் குந்தைகளுக்கு ஒரு சிறிய தொகை முதலீடு செய்யப்படும். அனைவராலும் முதலீடு செய்யத் தகுந்ததாகவும், இந்த முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

திட்டத்தின் நோக்கம் : பெண் குழந்தைகள் நலத்தை மேம்படுத்துதல்

யார் இந்த கணக்கு தொடங்கலாம்? : பெண் குழந்தையின் பெற்றோர் / சட்டப்பூர்வமான பாதுகாவலர்

கணக்குகளின் உச்ச வரம்பு: அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் அல்லது இரண்டாவது குழந்தை இரட்டையாக இருந்தால் 3 குழந்தைகள்.

முதலீட்டுத் தொகை : முதல் முறை செலுத்தும் தொகை குறைந்தபட்சம் ரூ.1000ஆக இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நூறு ரூபாயின் மடங்குகளில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

முதலீட்டுக் காலம் : கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து 21 ஆண்டுகள்.

பணம் செலுத்துவதற்கான உச்ச கால வரம்பு  : கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து 14  ஆண்டுகள்.

வட்டி: இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி, வட்டி ஆண்டுக்கொரு முறை ஆயிரக்களின் உள்ள தொகையின் மீது கணக்கிடப்படும். மாதம் தோறும் வட்டி பெறும் வசதியும் உள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 9.20%

வரிச் சலுகைகள்: 1.5 லட்சம் வரை முதலீடு செய்யப்படும்தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்பம. இத்திட்டத்தில் வரும் வட்டிக்கும் முதிர்வு தொகைக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும். கணக்கு முடிக்கப்படும் போதும் வரி விலக்கு அளிக்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்கு முற்பட்ட கணக்கு முடிப்பு: உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலமையிலோ அல்லது இறப்பின் போதோ மத்திய அரசின் அங்கீகாரத்தின் படி கணக்கு முடிக்கப்படலாம்.

பணம் கட்டுதலில் ஒழுங்கின்மை / கணக்கை மறுபடி துவக்குதல்: ஓராண்டுக்கு 50 ரூ. அபராதமும் ஓராண்டிற்கு கட்டப்படவேண்டிய குறைந்த தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தும் முறை: பணம் / காசோலை / டிமாண்ட் டிராப்ட்

பணம் எடுத்தல்: கணக்கில் உள்ள தொகையில் 50% வரை உயர் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ 18 வயதிற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு இங்கே அணுகவும்.

தமிழில்: ஜ.சிவகுரு

SivaGuru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

 

About The Indian Iris

Just like an iris controls the light levels inside the eye making it possible for us to see the outside world, The Indian Iris aims at shedding light on the ongoing political affairs, policies and schemes of the Government of India (GOI) and those of the State Governments.

One comment

  1. sar I am started tha poultry farms please
    please governments loan please halp me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *