தீனதயாள் உபாத்யாய் ஸ்வானியோஜன் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் தொழில் முனைவோரையும் தொழில் துவக்கும் சூழ்நிலையையும் ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தயாராகிவருகிறது. கிராம வளரச்சி அமைச்சகம், முத்ரா வங்கி கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன் வசதி வழங்குவோருடன் இந்தத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது.
‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் புதிய வணிகம் துவங்கவும் உதவியளிக்கும். இதற்காக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளைப் பற்றி ஆலோசித்து வருகிறது.
சுய வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள கிராமபுற இளைஞர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்படும் அதைத்தொடர்ந்து கடன் வசதியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும். வாழ்வாதார திட்டத்தின் கீழ் அழகுக் கலை முதல் விவசாயம் வரை பயிற்சி அளிக்கப்படும்.
மூலம்: ET
தமிழில்: ஜ.சிவகுரு