இ-பாடசாலா திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேட்பாட்டு அமைச்சகம், உயர் கல்விக்கான 12,000 இ-புத்தகங்களை அடுத்த மாதத்தில் வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தகங்கள், கைபேசியின் செயலியில் (Mobile App) இலவசமாக வழங்கப்படும். இதைப்பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த படிக்கும் பொருட்கள் உயர்கல்வி சம்பந்தமான பல்வேறு பாடங்களையும், தலைப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்று கூறினார். முன்னதாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் மின் பதிப்பாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த 5 கிராமங்களுக்கு பதிலாக 10 கிராமங்களை, உன்னத பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தத்தெடுத்து, ஐஐடி, ஐஐஎம் போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் என்றும் மாணவர்களின் பங்களிப்பை கல்வி அடிப்படையில் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சர் இரானி கூறியுள்ளார்.
மூலம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
தமிழில்: ஜ.சிவகுரு