தற்போது இந்தியாவில் தொடக்க நிறுவங்களுக்கான ஏற்பட்டுள்ள ஏற்றத்தைத் தொடர்ந்து, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் தொடங்குவதை எளிமையாக்கவும் மத்திய அரசு புதிய இணையத்தை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுகள் தொடரும்.
இந்த ஆண்டு ஜனவரி 16 அன்ற அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப் இந்தியா’வின் செயல் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிற் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார். மேலும், அறிவுசார் சொத்து உரிமைகள் பதிவுக்கான வழிமுறைகளையும் எளிமையாக்க அமைச்சகம் முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அமைச்சகம் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு சட்டங்கள் தொடக்க நிறுவனங்களுக்காக சரியாக உள்ளதா என்பதை பற்றியும் பணியாற்றுவதாகவும் கூறினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய ஆண்டு பட்ஜெடில், மத்திய அரசு தொடக்க நிறுவனங்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் தொடர்ச்சியாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, உலகளவில் உபயோகப்படுத்தப்படும் கண்டுபிடிப்புகள் மூலம் வரும் வருவாய்க்கு 10% வரி விதிப்பதாகவும் முன்மொழிய்ப்பட்டுள்ளது.
மூலம்: Your Story
தமிழில்: ஜ.சிவகுரு.
sir I’m karthikeyan stared cow dairy farming I’m going to bank but not support.available 3 yekers any help with dairy farm
sar I have a starting a new business dairy farms I am staying in Dubai I am coming to next month so please halp me
Contact over+91-9971739102 or email us at [email protected]