- தமிழகத்தில் கூகுள் வை-பை சேவையை பெறும் முதல் நிலையமாக வரலாற்று சிறப்புமிக்க சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்ச் 2016க்குள் இந்த நிலையத்தில் வை-பை வசதியை முழுதுவதுமாக வழங்க திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் இந்திய ரெயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகம் செய்வதற்கான ரெயில்டெல் நிறுவனத்துடனான கூகுளின் திட்டமாகும்.
- மத்திய ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியான இத்திட்டம் 2014 செப்டம்பர் முதல் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2016 மார்ச் மாதம் முதல், பயனிகளுக்கு விநாடிக்கு 1GB வேகத்தில் இணைப்புகளை வழங்கப்படும். ரெயில்டெல் நிறுவனம் பிராட்பேன்ட் சேவையையும், கூகுள் நெட்வொர் அக்ஸஸ் பாய்ன்டுகளையும் வழங்கும்.
- தமிழகத்தில், சென்னை எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மேலும் ஆறு ரயில் நிலையங்களில் வழங்க கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுத்துள்ளார்.
- கூகுளின் இந்தப் புது முயற்சி பிரச்சித்திபெற்ற மும்பை மத்திய ரயில் நிலையத்தில் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும்.
மூலம்: New Indian Express
தமிழில்: ஜ.சிவகுரு (In tamil- By Sivaguru)